ஞானசார தேரர்: வைத்தியசாலையில் இருந்து, மீண்டும் சிறைச்சாலைக்கு

🕔 September 9, 2018

டூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளார்.

இவர் மூன்று தடவை இவ்வாறு வைத்தியசாலையிலிருந்து மாற்றபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டில் 06 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சில நாட்களில் – ஞானசார தேரருக்கு ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து தொடர்ந்து சில நாட்கள் அந்த வைத்தியசாலையில் இருந்து வந்த தேரர், பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் இரண்டு தடவை ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு தேரர் மாற்றப்பட்டார்.

தற்போது, அந்த வைத்தியசாலையில் இருந்து மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு, ஞானசார தேரர் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்