ஒன்றிணைந்த எதிரணியின் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் மரணம்

🕔 September 6, 2018

ன்றிணைந்த எதிரணியினர் நேற்று நடத்திய ‘ஜனபலய’ போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 81 பேர், மது அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 08 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட போது பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக, இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அம்பியுலன்ஸ் வண்டிகள் பயன்படுத்தப்பட்டன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கொழும்புக்கு வந்திறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இறுதியில் லேக்கவுஸ் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜக்ஷ ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்