ஒன்றிணைந்த எதிரணியின் போராட்டம்: ஆரம்பாகும் இடம் பற்றிய தகவல் கசிந்தது

🕔 September 5, 2018

‘மக்கள் பலம் கொழும்புக்கு’ என்ற தொனிப்பொருளில், அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று கொழும்பில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

பெருந்திரளான மக்கள் கலந்துக்கொள்ளவுள்ள இந்த எதிர்ப்பு போராட்டம் கொழும்பில், எந்த இடத்திலிருந்து ஆரம்பமாகப்போகிறது என்பது குறித்து ஒன்றிணைந்த எதிரணியினர் தொடர்ந்தும் ரகசியம் பேணி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த போராட்டமானது, கொழும்பு புறக்கோட்டை போதி மரச்சந்தியிலிருந்து, மத வழிபாடுகளுடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்