பேராசிரியர் ஹஸ்புல்லா திடீர் மரணம்

🕔 August 25, 2018
– பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள்   சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்  இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்.

இன்றைய தினம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பேராசியர் ஹஸ்புல்லா உயிரிழந்தார்.

அவரின் ஜனாஸா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் மன்னார் – எருக்கலம்பிட்டியைச் சொந்த இடமாகக் கொண்டவராவார். வடக்கிலிருந்து முஸ்லிம்களை புலிகள் விரட்டியடித்தபோது, இவரும் குடும்பத்தினருடன் இடம்பெயர்ந்தார்.

மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு  உறுப்பினராக  செயற்பட்டு வந்த இவர், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி, முஸ்லிம் மக்களுக்கு விழிப்பூட்டல்களை ஏற்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்