மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தோல்வி

🕔 August 24, 2018

மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தோல்வியடைந்தது.

குறித்த அறிக்கை, இன்று நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவாக வாக்குகள் எவையும் பதிவாகவில்லை.

குறித்த அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டமையால், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடைந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்