மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில், அரசாங்கத்துக்கு விருப்பம் கிடையாது: பெப்ரல்

🕔 August 13, 2018

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அரசியல் விருப்பம் கிடையாது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலை நடத்துவதற்கான உடன்படிக்கையொன்றுக்கு வரவில்லை எனவும் பெப்ரல் கூறியுள்ளது.

சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் ஆயுள்காலம் கடந்த வருடம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் முடிவடைந்துள்ளன. அதன் காரணமாக, இந்த சபையின் நிருவாகங்கள் ஆளுநரிடம் உள்ளன.

இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைகின்றன.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம்  அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் அண்மையில் கூறியது. ஆனால்,  இதுவரையில் அது தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என பெப்ரல் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்