ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பமாகிறது

🕔 August 10, 2018

ந்தாம்ட தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் வேலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

428 விடைத்தாள் திருத்தும் நிலையங்களில் இந்தப் பணிகள் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக 06 ஆயிரத்து 848 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட உள்ளது.

572 விடைத்தாள் திருத்தும் நிலையங்களில் 08 ஆயிரத்து 432 ஆசிரியர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 37 பாடசாலைகள் மூடப்படும். ஆயினும் அந்த பாடசாலைகள், மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக அடுத்த மாதம் 06ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்