சுதந்திரக் கட்சியின் ஆடையை, அரசாங்கத்துக்கு அணிய வேண்டி தேவை கிடையாது: ரத்தன தேரர்

🕔 August 7, 2018

ற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என்று, அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அரசியலமைப்பின் பிரகாரம், 30 பேரையே அமைச்சர்களாக நியமிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

“தற்போதைய அரசாங்கமானது தேசிய அரசாங்கமில்லை. அது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமாகும். அதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களே உள்ளனர். எனவே, இந்த அரசாங்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆடையை அணிய வேண்டி தேவை கிடையாது” எனவும் அவர் கூறினார்.

மேலும் இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது, வர்த்தக கொள்கைகளுக்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்