என்னை ‘சேர்’ என்று அழையுங்கள்; மஹரகம நகர சபைத் தலைவர் எழுத்து மூலம் அறிவிப்பு

🕔 August 6, 2018

சேர்’ என்று தன்னை அழைக்குமாறு, மஹரகம நகரசபையின் தலைவர் ரிராஜ் லக்ருவன் ஜயரத்ன, எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.

மஹரகம நகரசபையின் தலைவருக்கான அலுவலக அறைக் கதவில் இந்த அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலில்; ‘நகரத்தின் முதலாவதுப் பிரஜை என்ப​தாலும் இந்த நிறுவனத்தில் நிறைவேற்றுப் பதவியை வகிப்பவர் என்பதாலும், சகல அதிகாரிகளும் பணியாளர்களும் மற்றும் சகல மக்களும், என்னை சேர் என்று அழைக்கவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அதன் கீழே தலைவர், நகர சபை, மஹரகம என்று குறிப்பிட்டு, அவரின் கையொப்பமும் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான அறிவுறுத்தலொன்று ஒன்றரை மாதங்களுக்கு முன்னரும் ஒட்டப்பட்ட நிலையில், பின்னர் அகப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஒட்டப்பட்ட அறிவுறுத்தல் தொடர்பில், மஹரகம நகர சபையின் ஜே.வி.பி. உறுப்பினர் தேவானந்த சுரவீர, ஐ.தே.கட்சி உறுப்பினர் ருவன் ஜயசிங்க ஆகியோர், நகரசபை தலைவரின் இந்த நடத்தை குறித்து எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்