இந்தோனேசியாவில் நில நடுக்கம்; 17 பேர் பலி: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பட்டுள்ளது

🕔 August 5, 2018

ந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுமார் 17 பேர் பலியாகியுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் லோம்போக் தீவு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்ஏற்பட்டது. சுமார் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 07 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இதனால் மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், வீதிகளில் மக்கள் பெருமளவில் கூடியுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தின் வெகு தொலையில் உணரப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தோனேசிய வானிலை நிலையம் அந்நாட்டு மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, கடற்கரையை அண்டியுள்ள மக்களை உயரமான பகுதிக்கு செல்லுமாறும் எச்சரித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களோடு ஒப்பிடுகையில், இது சக்தி வாய்ந்ததாகப் கருதப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்