பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது: மஹிந்த தெரிவிப்பு

🕔 July 31, 2018

மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அதிகாரம் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறை நிறைவேற்றப்படும் வரையில், பழைய முறை செல்லுப்படியாகும் என்பதனால், இந்த அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவன் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“இந்த அரசாங்கம் மக்களின் அபிலாஷைகளை அறிந்துக்கொள்ள பயப்படுகின்றது. அதன் காரணத்தினால்தான் மாகாண சபை தேர்தலை பிற்போட்டு வருகின்றது.

எவ்வாறாயினும் தேர்தலை நடத்தும் முழு அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இருக்கிறது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்