மாகாண சபைத் தேர்தல்; ஜனவரியில் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது: பிரதமர் தெரிவிப்பு
மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் ஊவா மாகாண சபைகள் தவிர்ந்த ஏனைய 07 சபைகளுக்கும், இவ்வாறு ஜனவரியில் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற போதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை பழைய முறையிலா அல்லது புதிய முறையிலா நடத்துவது என்பதைத் தீர்மானிக்க, எதிர்வரும் புதன் கிழமை கட்சித் தலைவர்கள் கூடுமாறும் பிரதமர் அறிவித்துள்ளார்.