பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்; கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம்: அமைச்சர் பைசர் தெரிவிப்பு

🕔 July 26, 2018

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக, கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

இது தொடர்பாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிக்கையில்;

“எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவது சம்பந்தமாக இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. ஆயினும் இந்தக் கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை” என்றார்.

இது தொடர்பான கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம், எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்