தடையை மீறி பறப்பதற்கு தம்மாலோக தேரர் முயற்சி; தடுத்து நிறுத்தினர் அதிகாரிகள்
உடுவே தம்மாலோக தேரர், இங்கிலாந்து பயணப்படவிருந்த நிலையில், குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை, அவரை திருப்பியனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடு செல்ல தேரருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை காரணமாகவே, அவர் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தேரருக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றத் தடையுத்தரவு ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் செப்டம்பர் 12ஆம் திகதி வரை நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆயினும், அதற்கு முன்னதாக தேரர் பயணிப்பதற்கு எடுத்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.