முஸ்லிம் மீடியா போரம் தலைவராக என்.எம். அமீன் மீண்டும் தெரிவு

🕔 July 22, 2018
– பாறுக் ஷிஹான் –

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவராக என்.எம். அமீன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முஸ்லிம் மீடியா போரம் – இன் 22ஆவது  வருடாந்த பொதுக் கூட்டம்  நேற்று சனிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள  புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது நடைபெற்ற நிருவாகத் தெரிவின் போதே, மீண்டும் தலைவராக அமீன் தெரிவானார்.

மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகவும் நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்கா ஓஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ. முஹம்மத் அபூபக்கர் சமூக விஞ்ஞான அறிவியல் அறிஞரும் எழுத்தாளருமான புரவலர் எம். ஜே. முஹம்மத் இக்பால் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

பொதுக்கூட்டத்தின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது.

மேற்படி நிர்வாக ஆண்டிற்கான தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் பொதுச் செயலாளராக என்.ஏ. எம். ஸாதிக் ஷிஹான் பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் குறித்த பதவிகளுக்கு போட்டிகள் இன்றி ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது, மூத்த ஊடகவியலாளர்கள் 09 பேர் கௌரவிக்கப்பட்டதோடு, ஊடகவிலயாளர்களின் விபரங்கள் அடங்கிய புத்தகமும் வெளியிடப்பட்டமை குறிப்பித்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்