காசாவில் இடம்பெற்ற சண்டையில் 04 பலஸ்தீனர்கள் பலி
இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரும் நான்கு பாலத்தீனர்களும் நேற்று வெள்ளிக்கிழமை காசாவில் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது காசா எல்லையில் ஓரளவு அமைதி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இடையில் பின்னிரவில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
எல்லையில் ஊடுருவ பாலத்தீன தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டதாக கூறிய இஸ்ரேல் ராணுவம், அதற்கு பதிலடியாக ஹமாஸ் நிலை ஒன்றில் டாங்கி தாக்குதல் நடத்தியமையானது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயலாக அமைந்தது.
எல்லையில் இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, காசாவிலுள்ள பல இலக்குகளை இஸ்ரேலிய படைப்பிரிவுகள் தாக்கின.
2014ம் ஆண்டு நடைபெற்ற கடைசி சண்டைக்குப் பிறகு, காசாவிலும், அதனை சுற்றியுள்ள இடங்களிலும் முதல் முறையாக ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.