அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர்: விஜயகலாவுக்கு எதிராக சுவரொட்டி

🕔 July 9, 2018
– பாறுக் ஷிஹான் –
முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 
விஜயகலாவின் படத்தைக் கொண்ட குறித்த சுவரொட்டியில் ‘வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றவாளி’, ‘ தனது அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர்’, ‘இவருக்கு எம்.பி  பதவி எதற்கு?’ ஆகிய வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
இன்று திங்கட்கிழமை காலை வேளையில், குறித்த சுவரொட்டிகள் யாழ் நகரப்பகுதிகள் எங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.  இந்த சுவரொட்டியை வெளியிட்டவர்கள் ‘நாளைய தலைமுறை’ என தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர்.
 முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா  மகேஸ்வரனை, ‘தமிழ்த் தலைவி’ எனப் புகழ்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழில் சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டிருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்