கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ணா, சுட்டுக் கொலை

🕔 July 9, 2018

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கிருஷ்ணா, இன்று திங்கட்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

புறக்கோட்டை  பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது.

இன்று காலை 7.45 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றிற்குள் வைத்து, இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் – துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணா என அறியப்படும் கிருஷ்ணப்பிள்ளை கிருபாணந்தன் (வயது 40)  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ‘நவோதய கிருஷ்ணா’ என்றும் அழைக்கப்படுவார்.

இவர் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில், புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்