விஜயகலாவின் கருத்துக்கு, சம்பந்தன் கண்டனம்
புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ரா. சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தமிழ் – சிங்கள மக்களிடையே சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டு வரும் நிலையில், விஜயகலா தெரிவித்துள்ள கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊடகமொன்று அவர் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடையே பழையவற்றை மீண்டும் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தொடர்பான செய்தி: ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகரும் தெரிவிப்பு