கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைராக ஏ. ஜெகராஜு தெரிவு

🕔 July 4, 2018

– எம்.ஐ. சர்ஜுன் –

லங்கை, கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 33வது வருடாந்தப் பொதுக்கூட்டம் இன்று புதன்கிழமை பாசிக்குடாவில் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் ரா. ராஜசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியர். ரி. ஜெயசிங்கம், பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி. கே.ஈ. கருணாகரன், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி. எஸ். ஜெயசங்கர் மற்றும் கலை கலாசார பீட பீடாதிபதி எம். ரவி, பதில் பதிவாளர் ஏ. பகிரதன், நிதியாளர் எம்.எம்.எம். பாரிஸ் மற்றும் தாபனங்கள் பிரிவின் (கல்விசாரா) சிரேஷ்ட உதவிப் பதிவாளர் வி. நவிரதன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகம், திருகோணமலை வளாகம் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தைச் சேர்ந்த சுமார் 450 கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது 2018/2019 வருடத்திற்கான நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். இதற்கிணங்க தலைவராக ஏ. ஜெகராஜு, உபதலைவராக ரா. ராஜசேகரம், செயலாளர் த. ஸ்ரீதரன், உப-செயலாளராக  மாஅமிர்தலிங்கம், பொருலாளராக – ச. ரவீந்ரகுமார் உள்ளிட்டோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும், பீடங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான பிரிதிநிதிகளும் அத்துடன் கிழக்கு ஒளி சஞ்சிகைக் குழு, கலை கலாசாரக் குழு, விளையாட்டுக் குழு போன்ற உப-குழுக்களுக்கான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களும் பாராட்டப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்