விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை

🕔 July 3, 2018

ராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விஜயகலா மகேஸ்வரனை இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் உருவாக வேண்டும் என்றும், அவர்களின் கைகள் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓங்க வேண்டுமென்றும், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.

இதனையடுத்து விஜயகலாவிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விசாரணைகள் நிறைவடையும் வரையில், அவரை அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் இந்த உரை குறித்து, இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் அரசாங்க மற்றும் எதிர் தரப்பு உறுப்பினர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்