அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு
கஞ்சா பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக சுகாரதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
முப்படைகளின் மேற்பார்வையின் கீழ் 100 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கஞ்சா செய்கையை மேற்கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் கஞ்சா செய்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், கஞ்சா பயிர் மூலம் சில நோய்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
பிரித்தானிய ஆட்சி இருக்கும் சந்தர்பத்திலேயே, இலங்கையில் கஞ்சா பயிர்செய்கைக்கு தடை விதிக்கப்பட்டதாவும், எனினும் அவற்றை நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்மூலம், நாட்டிற்கு பல பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.