தந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை

🕔 June 25, 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று திங்கட்கிழமை வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியுள்ளார்.

அவரின் தந்தையார் டீ.ஏ. ராஜபக்ஷவின் நினைவாக தங்காலை வீரகெட்டிய பகுதியில் அருங்காட்சியத்தை நிர்மாணிப்பதற்கு, அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

சுமார் மூன்று மணித்தியாலங்கள் இவர் வாக்குமூலம் வழங்கிய பின்னர், அங்கிருந்து வெளியேறியதாகக் தெரியவருகிறது

இந்தச் குற்றச்சாட்டுக்காக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு, அவரைக் கைது செய்வதை தடுக்கும் பொருட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்