பசியால் வாடும் நாடுகளின் பட்டியல்: இலங்கையும், நைஜீரியாவும் ஒரே இடத்தில்

🕔 June 23, 2018

சியால் வாடும் மக்கள் வசிக்கும் 119 நாடுகளின் பட்டியலில் இலங்கை 84 ஆவது இடத்தில் உள்ளது. நைஜீரியாவும் இதே இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொஸ்னியா, துருக்கி உள்ளிட்ட 14 நாடுகள், இந்தப் பட்டியலில் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

உலகில் எய்ட்ஸ், மலேரியா, காசநோய் உள்ளிட்டவற்றினால் இறப்பவர்களைவிடவும் பசியால் இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும்.

இதேவேளை, உலகம் முழுக்க உணவு கிடைக்காமல் பட்டினி கிடப்பவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் என்ற பரிதாபத் தகவலும் வெளியாகியுள்ளது.

மேற்படி பட்டினிப் பட்டியலில் ரஷியா 22ஆவது இடத்திலும், சவுதி அரேபியா 27, சீனா 29, சுவிட்சர்லாந்து 71, இலங்கை மற்றும் நைஜீரியா 84, வங்காளதேசம் 88, இந்தியா 100ஆவது இடங்களில் உள்ளன.

ஒரு மனிதர் ஆரோக்கியமாக இருக்க நாள்தோறும் அவரது உணவின் வாயிலாக 02 ஆயிரத்து 100 கலோரி அவருக்குக் கிடைக்க வேண்டும் என்று ஐ.நா.சபை வரையறுத்திருக்கிறது. உலகின் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களில் 98 சதவீதம் பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

ஆசிய நாடுகளில் பசியால் வாடும் நாடுகளில் ஆப்கானிஸ்தான் முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. அன்றாட உணவில் ஊட்டச்சத்து எவ்வளவு கிடைக்கிறது என்பதன் அடிப்படையிலேயே ஒருவர் வறுமையில் வாடுகிறாரா இல்லையா என்பது கணக்கிடப்படுகிறது.

நகர்ப்புறக் குழந்தைகளுடன் ஒப்பிடும்போது ஊட்டச்சத்துக் குறைபாட்டால் கிராமப்புறக் குழந்தைகள் 02 மடங்கு குள்ளமாக வளர்கின்றனர்.

உலகம் முழுவதும், போதிய உணவு கிடைக்காததே 50 சதவீத குழந்தைகளின் இறப்புக்குக் காரணம் என்பது மற்றோர் அதிர்ச்சித் தகவலாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்