ஞானசாரர் விவகாரம் தொடர்பில், மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பு வெளியாகலாம்: பௌத்த சாசன அமைச்சர் நம்பிக்கை

🕔 June 19, 2018

 ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலிக்கும் நீதிமன்றம், ஞானசார தேரர் சார்பில் மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பினை வழங்கும் என்று – தான் நம்புவதாக, பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், ஞானசார தேரர் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு, இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதியை சந்திப்பதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு, ஹேமாகம மேல் நீதிமன்றில் இன்று செவ்வாய்கிழமை ஆராயப்படவுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி இந்த மேன்முறையீட்டு மனுவை கலகொட அத்தே ஞானசார தேரரின் சட்டத்தரணி தாக்கல் செய்திருந்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்