பொது வேட்பாளர் எவருக்கும், ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது: மஹிந்த அமரவீர

🕔 June 16, 2018

பொது வேட்பாளர் ஒருவருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலருடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான மஹிந்த அமரவீர இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்