பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு, என்னால் பணம் கொடுக்க முடியும்: கபீர் ஹாசிம்

🕔 June 5, 2018

பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு பணம் தேவைப்பட்டால், தன்னால் கொடுக்க முடியும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனைக் கூறினார்.

மேலும், தேர்தல் பிரசாரத்துக்காக யாரிடமும் தான் பணம் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடம் பணம் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை, சபாநாயகர் வெளியிட வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்