உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக அமைச்சர் ராஜித தெரிவு
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக இன்று திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்டார்.
இதற்கிணங்க, உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக ஒரு வருட காலத்துக்கு அமைச்சர் ராஜித கடமையாற்றவுள்ளார்.
சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70 வது பொதுக்கூட்டம் இடம்பெற்றபோது, அமைச்சர் ராஜித சேனாரத்ன இப்பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மே மாதம் 22 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை ஜெனீவாவில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70வது உச்சி மாநாடு நடைபெறுகின்றது.