மஹிந்த தலைமையில் தேர்தலில் குதிப்போம்; முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன

🕔 May 14, 2018

ஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், தான் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக, அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார்.

இதேவேளை, அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேறு கட்சியுடன் இணையவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்த சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் அரசாங்கத்திலிருந்து விலகியதோடு, நாடாளுமன்றில் எதிரணி ஆசனங்களிலும் அண்மையில் அமர்ந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்