ஈரான் ஜனாதிபதியை மைத்திரி சந்தித்தார்

🕔 May 13, 2018

ரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளார்.

ஈரானுக்கான இரண்டு நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன நேற்று சனிக்கிழமை ஈரான் பயணமானார்.

இலங்கைக்கும் ஈரானுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் இந்த விஜயம் அமைந்துள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் இச்சந்திப்பின்போது கைச்சாத்திடப்படவுள்ளது.

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதிப் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் ஈரானுக்கு மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம் இதுவாகும்.

ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் விசேட அழைப்பையேற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்