தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக பௌசி நியமனம்
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவும் பிரசன்னமாகியிருந்தார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சராக மனோ கணேசனும், பிரதியமைச்சராக அலிசாஹிர் மௌலானாவும் பதவி வகிக்கின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக இம்முறை நாடாளுமன்றத்துக்கு தேசியப் பட்டியல் மூலம் பௌசி தெரிவானார்.
இவருக்கு இப்போது 80 வயதாகிறது.