‘தங்க மயில்’ திருடர்கள் அகப்பட்டனர்

🕔 May 7, 2018

காலம் சென்ற இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் ‘தங்க மயில்’ விருதுக்கான பதக்கத்தைத் திருடிய சந்தேகத்தின் பேரில், 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டடார்.

புகழ்பெற்ற சிங்கள திரைப்பட இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் தங்க மயில் விருதுக்குரிய பதக்கம், கடந்த 02ஆம் திகதி அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது காணாமல் போயிருந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை கொள்ளுபிட்டி- கடுவலை பாதையில் பயணிக்கும் தனியார் பஸ்ஸிலிருந்து குறித்த பதக்கம் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் 06 சந்தேகநபர்கள் இன்று திங்கட்கிழமை காலை கைதுசெய்யப்பட்டனர் என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

சந்தேகநபர்களுள் ஐவர் கம்பளை நாவலப்பிட்டி – இனிதும பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

தொடர்பான செய்தி: இயக்குநர் ஜேம்ஸ் பீரிஸின் காணாமல் போன தங்கமயில் பதக்கம், பஸ்ஸில் இருந்து கண்டெடுப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்