பஸ் புரண்டு விபத்து; 29 பேர் காயம்

🕔 April 23, 2018

– க.கிஷாந்தன் –

லங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று, நோர்வூட் தியசிரிகம நிவ்வெளி பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

ஹட்டனிலிருந்து ஒல்டன் வழியாக சாமிமலை நோக்கி பயணித்த பஸ் வண்டி, ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் பயணிக்கும் போது விபத்துக்குள்ளானது.

பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 29 பேரில் 04 பெண்கள், 02 சிறுவர்கள், 23 ஆண்கள் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்