ஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு

🕔 April 21, 2018

வுகணை சோதனைகள் அனைத்தினையும் நிறுத்திவிட்டு, தமது நாட்டிலுள்ள அணு ஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடி விடப் போவதாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.

“அணுஆயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் அனைத்தினையும் ஏப்ரல் 21ஆம் திகதியிலிருந்து நிறுத்தி விடுவதாக” அந்த வட கொரிய செய்தி சேவை கூறியுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதியை இலக்காக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

தென் கொரியாவின் தலைவர் மூன் ஜே-இன்னை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் அடுத்த வாரம் சந்திக்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும்,  அமெரிக்க அதிபர் டிரம்பையும் ஜூன் மாதம் கிம் ஜாங்-உன் சந்திக்கவுள்ளார்.

இந்த நிலையில், “வட கொரியாவுக்கும், ஒட்டு மொத்த உலகுக்கும் இது நற்செய்தி – பெரும் முன்னேற்றம்” அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

முன்னதாக, அணு ஆயுத பயன்பாட்டை நிறுத்தினால், வட கொரியாவுக்கு ஒளிமையமான எதிர்காலம் இருக்கும் என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

வட கொரியாவின் இந்த அறிவிப்பானது “அர்த்தமுள்ள ஒரு முன்னேற்றம்” என்று தென் கொரிய தலைவரின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்