14ஆம் திகதிக்கு முன்னர், அமைச்சரவையில் மாற்றம்: ஜனாதிபதி தெரிவிப்பு

🕔 April 10, 2018

மைச்சரவையில்  மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர், இந்த மாற்றம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் தமிழ் – சிங்கள புது வருடத்துக்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்புச் செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்