சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

🕔 April 9, 2018
கிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண தொடண்டர் ஆசிரியர் சங்கம்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்தது.

அமைச்சரை நேற்று  ஞாயிற்றுக்கிழமை கிண்ணியாவில் சந்தித்து இந்த கோரிக்கையினை சங்கத்தினர் முன்வைத்தனர்.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை உடனே தொடர்புகொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், உண்மை நிலவரங்களை கேட்டறிந்துகொண்டார்.

இன்னும் சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆளுநர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்