தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்குவது தார்மீகமான செயற்பாடல்ல; கபே தெரிவிப்பு

🕔 August 23, 2015

CAFFE - 01பொதுத் தேர்தலில்  தோல்விடைந்தவர்களை தேசியப் பட்டியல் மூலமாக தெரிவு செய்வதென்பது, தார்மீக அடிப்படையிலான நடவடிக்கையல்ல என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேல்தலுக்குக்கான மக்கள் இயக்கம் (கபே தெரிவித்துள்ளது.

தேர்தலில்  தோல்வியடைந்த ஒருவரை, தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்வது, தேர்தல் சட்டத்தின் படி சரியாயினும்,  தார்மீக அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கையாகும் என்று, ‘கபே’ யின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

ஐ.ம.சு.முன்னணியைச் சேர்ந்த 07 பேரும்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இருவரும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து தலா ஒருவருமாக, இம்முறை தேர்தலில் தோல்லியுற்ற 11 பேர்,  தேசியப் பட்டியல் மூலமாக, நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்