சிரியாவில் விச வாயுத் தாக்குதல்; 70 பேர் பலி: அரச படை மீது குற்றச்சாட்டு

🕔 April 8, 2018

சிரியாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் ஆகக்குறைந்தது 70 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிரிய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில், நேற்று சனிக்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரிய படையினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றபோதும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சிரிய அரசாங்கம் மறுத்துள்ளது. மேலும், அவை சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எனவும் தெரிவித்தள்ளது.

அறிக்கைகளை கண்காணித்து வரும் அமெரிக்க அரசுத்துறை, தாக்குதல்களில் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தால், சிரிய அரசுடன் இணைந்து போராடும் ரஷ்யாதான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதேவேளை, ரசாயன ஆயுதங்களைக் கொண்டு, எண்ணற்ற சிரிய மக்களை தாக்கியமைக்கு ரஷ்யாவே பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதலல்ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர் மூலம் வீசப்பட்டதாக கூறப்படும் குண்டில் ‘சரின்’ எனப்படும் நச்சு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு கூட்டா பகுதியில்,கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமா, சிரிய படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்