தம்மை பதவி விலக்குமாறு, சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

🕔 April 7, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தம்மை பதவி விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்படி அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கடிதமொன்றின் ஊடாக இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அமைச்சர் தயாசிறி ஜயசேகர மூலம் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர், பிரதமருக்கு எதிரான மேற்படி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொண்ட அதேவேளை, பிரேரணைக்கு ஆதரவாக சிலர் வாக்களித்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்