அமைச்சர்கள் சிலருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: அமைச்சர் தயா கமகே

🕔 April 6, 2018

தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்துக் கொண்டு, ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களால், ஐக்கிய தேசியக் கட்சியின் பயணம் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தயா கமகே தெரிவித்துள்ளார்.

எனவே, அவ்வாறானவர்களுக்கு எதிராக, பிரதமருடன் இணைந்து ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்மெனவும் அமைச்சர் தயா கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணையொன்றினை,  ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்