நம்பிக்கையில்லா பிரேரணை; ஆரம்பித்தது விவாதம்: இரவு வாக்கெடுப்பு

🕔 April 4, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் சமர்ப்பித்து, விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிலையில் இன்று இரவு 9.30 மணிக்கு நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றிலுள்ள இலத்திரனியல் வாக்களிப்பு முறைமையை, இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்புக்குப் பயன்படுத்துவதில்லை என்று, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்