நிந்தவூர் பிரதேச சபையை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது

🕔 March 27, 2018
நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக எம்.ஏ.எம். தாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுலைமான் லெப்பை பிரதி தவிசாளராக தெரிவாகியுள்ளார்.

நிந்தவூர் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது, மேற்படி தெரிவுகள் நடைபெற்றன.

அந்த வகையில் நிந்தவூர் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து, நிந்தவூர் பிரதேச சபையில் இந்தக் கூட்டாட்சி உருவாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்