முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்; மு.கா. தலைவரிடம் துருக்கி தூதுவர் கவலை
முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவாத வன்செயல் குறித்து, மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமிடம் துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தனது கவலையை தெரிவித்தார்.
துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துண்கா சுஹதார், இன்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை, அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை மையப்படுத்தி நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது, அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட இனவாத வன்செயல் குறித்தும் தூதுவர் தனது கவலையை வெளியிட்டதுடன், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்திவருவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கையில் துருக்கி முதலீடு மேற்கொள்வதற்கு ஆர்வம் செலுத்திவருகின்றமை குறித்து, இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)
துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துண்கா சுஹதார், இன்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை, அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை மையப்படுத்தி நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது, அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட இனவாத வன்செயல் குறித்தும் தூதுவர் தனது கவலையை வெளியிட்டதுடன், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்திவருவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கையில் துருக்கி முதலீடு மேற்கொள்வதற்கு ஆர்வம் செலுத்திவருகின்றமை குறித்து, இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)