யாழ்ப்பாணம்; முட்டாசுக்கடை சந்தியில், பெற்றோல் குண்டுத் தாக்குதல்

🕔 March 25, 2018
–  பாறூக் ஷிஹான் –

யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பிரதான வீதி – முட்டாசுக்கடை சந்தியில்   ஜிப்சம் விற்பனை செய்யும் கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், குறித்த கடைமீது பெற்றோல் குண்டு தாக்குதலை நடத்தியதோடு, கற்களையும் வீசிச்சென்றுள்ளனர்.

இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன் பெற்றோல் குண்டு வெடித்தனால் கடை சிறிதளவு சேதமடைந்துள்ளது.சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்