நாமலுக்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டது ஏன்; காரணம் சொல்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

🕔 March 23, 2018

நாமல் ராஜபக்ஷக்கு அமெரிக்கா செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டமையானது இலங்கையில் அமெரிக்காவின் ஆதிக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை எடுக்காட்டுவதாக முன்னாள் அமைச்சரும் குருநாகல் மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில்;

“நாமல் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லவில்லை. அல்லது நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்ய செல்லவில்லை. அவருடைய நெருங்கிய உறவினரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ளவே அமெரிக்கா செல்ல வேண்டியேற்பட்டது. ஆனால் காரணம் இன்றி அவரின் பயணத்தை அமெரிக்கா தடைசெய்துள்ளது. இது இலங்கை மீதான அமெரிக்க ஆதிக்கத்தை எடுத்துக் காட்டுக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்க எதிர்ப்பு கொள்கையில் உள்ளவர் என்பது உலகறிந்த விடயம். அவர் எப்போதும் அமெரிக்காவுக்கு எதிரான இஸ்ரேலுக் குஎதிரான பலஸ்தீனுக்கு ஆதரவான கொள்கையில் இருப்பவர்.

அவர் அன்று அமெரிக்காவுக்கு தலை சாய்த்து இருந்தால், இன்றும் அவரே இந்த நாட்டின் ஜனாதிபதி. ஆனால் அவர் அமெரிக்க சதியில் சிக்கவில்லை. இன்று  அமெரிக்காவின் சதி வலைக்குள் நாடு சிக்கிக்கொண்டுள்ளது” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்