பாகிஸ்தான் சென்றார் மைத்திரி; குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாகவும் பங்கேற்கிறார்

🕔 March 22, 2018

னாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று வியாழக்கிழமை பாகிஸ்தான் சென்றுள்ளார்.

நாளை நடைபெறவுள்ள பாகிஸ்தானின் குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளுமாறு, அந்த நாட்டின் ஜனாதிபதி விடுத்திருந்த அழைப்புக்கிணங்கவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு சென்றுள்ளார்.

இதேவேளை, இரண்டு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளை கட்டியெழுப்புகின்றமை தொடர்பில், இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

மேலும், வெளிநாட்டு சேவை பயிற்சி, கல்வி மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட நான்கு விடயங்களில், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்