பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; .இன்று கையளிக்கப்படும்

🕔 March 21, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, இன்று புதன்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

குறித்த பிரேரணையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களையும், இந்தப் பிரேரணையில் பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஒன்றிணைந்த எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்