தலைமைத்துவத்தை புதியவர்களுக்கு வழங்க தயார்: ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

🕔 March 20, 2018

க்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை புதியவர்களுக்கு வழங்கதயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார்.

இந்தக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதென, ஐக்கிய ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி கூட்டத்தில், ஐக்கிய தேசியகட்சியின் மறுசீரமைப்பு குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. இதன்போதே, கட்சியின் தலைமைத்துவத்தை புதியவர்களுக்கு வழங்கதயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள ஒன்றிணந்த எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதன்போது தமது யோசனைகளை முன்வைத்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்