அர்ஜுனை கைது செய்து, நீதிமன்றில் நிறுத்துமாறு உத்தரவு

🕔 March 15, 2018

த்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதேவேளை, பெபேசுவல்ஸ் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர் ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை, தொடர்ந்தும் 27ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறை மோசடியில் சம்பந்தப்பட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில், மேற்படி நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்