மெனிக்ஹின்ன தாக்குதலில் ஈடுபட்ட 07 பேர் கைது; நால்வர் வெளியிடங்களைச் சேர்ந்தோர்
மெனிக்ஹின்ன பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு வன்முறையில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
மேற்பேடி 07 பேரில் நால்வர் மெனிக்ஹின்ன பகுதியை தவிர்ந்த பிற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கண்டி பிரதேசத்திற்கு 03 விசேட பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் விசேட 03 பொலிஸ் குழுக்கள் ஆகியவையே அங்கு சென்றுள்ளன.